• Mon. Aug 25th, 2025

24×7 Live News

Apdin News

காசா மருத்துவமனை மீதான இஸ்ரேல் தாக்குதலில் நான்கு பத்திரிகையாளர்கள் உட்பட 15 பேர் உயிரிழப்பு

Byadmin

Aug 25, 2025


திங்களன்று காசாவில் உள்ள நாசர் மருத்துவமனை மீது மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகள் கூற்றுப்படி, தாக்குதல்களில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களில் ஒருவரான கேமராமேன் ஹுசாம் அல்-மஸ்ரி, ராய்ட்டர்ஸின் பத்திரிகையாளர் ஆவார்.

அத்துடன், ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளராக இருந்த புகைப்படக் கலைஞர் ஹாதெம் கலீத் காயமடைந்தார்.

கொல்லப்பட்டவர்களில் அல் ஜசீரா புகைப்பட பத்திரிகையாளர் முகமது சலாமா, பத்திரிகையாளர் மரியம் அபு டாக்கா மற்றும் என்பிசி நெட்வொர்க்கின் பத்திரிகையாளர் மோவாஸ் அபு தாஹா ஆகியோரின் பெயர்களை காசாவின் அரசு ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாசர் மருத்துவமனை மீதும், மற்றொன்று ஆம்புலன்ஸ் குழுவினர் மீதும் இரண்டு தாக்குதல்கள் நடந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

By admin