• Sun. Nov 23rd, 2025

24×7 Live News

Apdin News

காசா மீதான இஸ்ரேலிய வான் தாக்குதல்: 24 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் காயம்

Byadmin

Nov 23, 2025


தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு “அப்பட்டமாக மீறியதாகக்” கூறி இஸ்ரேல் காசாமீது நான்கு தனித்தனி வான் தாக்குதல்களை நடத்தியது.

இந்தத் தாக்குதல்களில் குறைந்தபட்சம் 24 பேர் கொல்லப்பட்டனர். இராணுவ அமைப்பான ஹமாஸின் இலக்குகளைத் தாக்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

காசா நகரின் அதிக மக்கள் அடர்த்தியுள்ள ரிமால் சுற்றுப்புறத்தில் உள்ள ஒரு காரைத் தாக்கியதில் 11 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர்.

மத்திய காசாவில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனைக்கு அருகிலுள்ள வீடுகள் மற்றும் டெய்ர் அல்-பாலா மற்றும் நுசெய்ராட் முகாம் பகுதிகளில் நடத்தப்பட்ட மற்ற தாக்குதல்களில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதாகக் காசாவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட குறைந்தது 54 பேர் காயமடைந்துள்ளனர்.

மனிதாபிமான உதவி நுழையும் தெற்கு காசாவில் உள்ள மனிதாபிமான வீதியை பயன்படுத்தி “ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள்” இஸ்ரேலிய கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் காணப்படும் ஐடிஎஃப் (IDF) துருப்புக்களைச் சுட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இருப்பினும், எந்த ஒரு வீரருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இஸ்ரேலின் இந்த “ஆதாரமற்ற” கூற்றுகளை ஹமாஸ் நிராகரித்ததுடன், இது “கொலைக்கான ஒரு சாக்கு” என்றும் கூறி, தாங்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருப்பதாகக் கூறியுள்ளது.ய

By admin