• Wed. Oct 9th, 2024

24×7 Live News

Apdin News

காஞ்சிபுரம்: சாம்சங் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு ஆதரவா? ஒரு மாத போராட்டத்தின் முழு பின்னணி

Byadmin

Oct 9, 2024


சாம்சங் இந்தியா போராட்டம்

பட மூலாதாரம், CPIM Tamilnadu

படக்குறிப்பு, சி.ஐ.டி.யு மாநில தலைவர் அ.சவுந்தரராஜன் உட்பட பல சாம்சங் ஊழியர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டனர்

சாம்சங் இந்தியா நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று (அக்டோபர் 9) கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடியவிடிய தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் கூறுகிறது.

“தொழிலாளர்களின் பக்கமே அரசு நிற்கிறது. அவர்களை அச்சுறுத்தவில்லை” என்கிறார் அமைச்சர் சி.வி.கணேசன்.

இரு தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுவிட்டதாக தமிழக அமைச்சர்கள் கூறிய நிலையில், ஊழியர்கள் கைது செய்யப்பட்டது ஏன்? போராட்டம் நடைபெற்ற இடத்தில் என்ன நடந்தது?

By admin