• Fri. May 16th, 2025

24×7 Live News

Apdin News

காஞ்சிபுரம்: வடகலை – தென்கலை மோதல், நூற்றாண்டு முரண்பாட்டின் மையம் என்ன?

Byadmin

May 16, 2025


காஞ்சிபுரத்தில் வடகலை  - தென்கலை வைணவர்களுக்கு இடையில் தொடர்ந்து நடக்கும் மோதல்
படக்குறிப்பு, கோப்புப் படம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் நடந்துவரும் நிலையில், வரதராஜ பெருமாளின் வீதி உலாவின்போது வடகலை வைணவர்களுக்கும் தென்கலை வைணவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

சில நூற்றாண்டுகளாகவே இத்தகைய மோதல்கள் தொடர்கின்றன.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலை முன்வைத்து வடகலை – தென்கலை வைணவர்களுக்கு இடையில் நடக்கும் மோதலின் பின்னணி என்ன?

பிரச்னையின் அடிப்படை என்ன?

காஞ்சிபுரத்தில் வடகலை  - தென்கலை வைணவர்களுக்கு இடையில் தொடர்ந்து நடக்கும் மோதல்
படக்குறிப்பு, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில்

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலை முன்வைத்து அந்தக் கோவிலோடு தொடர்புடைய வடகலை ஐயங்கார்களுக்கும் தென்கலை ஐயங்கார்களுக்கும் இடையிலான மோதல் சில நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்டது என்றாலும், கடந்த சில ஆண்டுகளில் இந்த மோதல் உச்சத்தை எட்டியிருக்கிறது.

By admin