இந்நிலையில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி, மனைவி பெற்றோர் வீட்டிற்குச் சென்றிருந்த சமயம் பார்த்து ரவீந்திரா, மௌனிகாவைத் தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.
அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், மௌனிகாவைக் குத்திக் கொலை செய்துள்ளார்.
கொலையை மறைக்க, மௌனிகாவின் உடலைப் பல துண்டுகளாக வெட்டிய ரவீந்திரா, சில பாகங்களைப் பிரிட்ஜில் மறைத்து வைத்துள்ளார்.
மற்ற பாகங்களை ஒரு பையில் அடைத்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வீசியுள்ளார்.
இதன்பின் எப்படியும் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் ரவீந்திரா தாமாகவே காவல் நிலையம் சென்று சரணடைந்து தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
ரவீந்திராவின் வீட்டில் இருந்து உடலின் சில பாகங்களைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அவர் வீசிய பையும் மீட்கப்பட்டுள்ளது.