• Sun. Oct 5th, 2025

24×7 Live News

Apdin News

காந்தி தனது மூத்த மகன் முஸ்லிமாக மதம் மாறிய போது என்ன செய்தார்?

Byadmin

Oct 5, 2025


காந்தி - ஹரிலால்

பட மூலாதாரம், Getty Image/Roli Books

படக்குறிப்பு, மகாத்மா காந்திக்கு 19 வயது ஆனபோது, அவரது மூத்த மகன் ஹரிலால் காந்தி பிறந்தார்.

மகாத்மா காந்தி தனது வாழ்க்கையின் மிகப்பெரிய வருத்தமாக, இரண்டு பேரின் எண்ணங்களை மாற்ற முடியாததைத் தான் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் ஒருவர் முகமது அலி ஜின்னா, மற்றவர் அவரது மூத்த மகன் ஹரிலால் காந்தி.

காந்திக்கு 19 வயதானபோது ஹரிலால் பிறந்தார். குழந்தையாக இருந்த ஹரிலால், காந்தியுடன் மிகுந்த நெருக்கமாக இருந்தார்.

ஆனால், ஹரிலால் பிறந்த சில மாதங்களுக்குள், காந்தி தனது சட்டப் படிப்பிற்காக லண்டனுக்குப் புறப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தான் இந்தியா திரும்பினார்.

காந்தி அவர்களுடன் இல்லாத காலத்தில், அவரது குடும்பத்தினர், குறிப்பாக ஹரிலால், அவரது பாசத்தை மிகவும் இழந்தார்.

By admin