• Thu. Oct 30th, 2025

24×7 Live News

Apdin News

காபியை வடிகாலில் ஊற்றிய பெண்ணுக்கு ரூ.17,000 அபராதம் – முடிவு பின் வாங்கப்பட்டது ஏன்?

Byadmin

Oct 30, 2025


காபியை வடிகாலில் கொட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்ட பர்சு யெசிலியர்ட்
படக்குறிப்பு, சாலையோர வடிகாலில் திரவத்தைக் கொட்டுவது சட்டவிரோதம் என்று அமலாக்க அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக பர்சு யெசிலியர்ட் தெரிவித்தார்.

தென்மேற்கு லண்டன் கவுன்சில் ஒன்று, தனது காபியின் மிச்சத்தை வடிகாலில் கொட்டியதற்காக ஒரு பெண்ணுக்கு விதிக்கப்பட்ட 150 பவுண்டு (ரூ.17,527) அபராதத்தைத் திரும்பப் பெறுவதாக முடிவெடுத்துள்ளது.

கியூவில் வசிக்கும் பர்சு யெசிலியர்ட் என்பவர், தான் வேலைக்குச் செல்ல வேண்டிய பேருந்தில் காபியைக் கொட்டிவிடாமல் தவிர்க்க, மீண்டும் பயன்படுத்தக்கூடிய கோப்பையில் இருந்து ஒரு சிறிய அளவு காபியை வடிகாலில் கொட்டியபோது, தான் பொறுப்புடன் நடந்து கொள்வதாக நினைத்ததாகக் கூறினார்.

ரிச்மண்ட் நிலையத்திற்கு அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் மூன்று அமலாக்க அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தினர்.

‘சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1990’ பிரிவு 33-ன் கீழ் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்தச் சட்டம், சாலை வடிகால்களில் திரவங்களைக் கொட்டுவது உட்பட, நிலம் அல்லது நீரை மாசுப்படுத்தும் வகையில் கழிவுகளை வைப்பது அல்லது அப்புறப்படுத்துவது ஒரு குற்றம் என்று கூறுகிறது.



By admin