• Fri. Feb 27th, 2026

24×7 Live News

Apdin News

காபூல் மற்றும் கந்தஹார் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் – ஆப்கானிஸ்தானின் எதிர்வினை என்ன?

Byadmin

Feb 27, 2026


பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தான் தாலிபனுக்கும் இடையிலான ராணுவ மோதல் அதிகரித்துள்ளது (கோப்புப் படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தான் தாலிபனுக்கும் இடையிலான ராணுவ மோதல் அதிகரித்துள்ளது (கோப்புப் படம்)

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஆப்கன் தாலிபன்களுக்கு எதிராகப் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் ‘நேரடிப் போர்’ பிரகடனம் செய்துள்ளார்.

“இனியும் பொறுக்க முடியாது, அடுத்து இது நேரடிப் போராக இருக்கும்” என்று, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஆப்கன் தாலிபன்களை எச்சரித்துள்ளார்.

சமூக ஊடகத் தளமான எக்ஸ்-இல் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ஆப்கன் தாலிபன்கள் உலகம் முழுவதிலுமிருந்து பயங்கரவாதிகளை ஆப்கானிஸ்தானில் திரட்டுவதாக” அவர் குற்றம் சாட்டினார். மேலும் காபூலில் உள்ள இடைக்கால அரசாங்கம் “பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதாக” அவர் கூறியதாக பிபிசி உருது சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், தலைநகர் காபூல், பக்திகா மற்றும் கந்தஹாரில் உள்ள பல இடங்களை பாகிஸ்தான் குண்டுவீசித் தாக்கியதை உறுதிப்படுத்தினார். இந்தத் தாக்குதல்களில் உயிர்ச்சேதம் ஏதுமில்லை என்று அவர் கூறினார்.

ஆப்கன் தாலிபன்கள் “தங்கள் மக்களுக்கு அடிப்படை மனித உரிமைகளையும், இஸ்லாம் பெண்களுக்கு வழங்கும் உரிமைகளையும் மறுப்பதாக” பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குற்றம் சாட்டினார்.

By admin