• Mon. Mar 2nd, 2026

24×7 Live News

Apdin News

காமனெயி கொலைக்கு பிறகு இரானில் தற்போது அதிகாரம் யாரிடம் உள்ளது?

Byadmin

Mar 2, 2026


இரான் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி

பட மூலாதாரம், Majid Asgaripour/WANA (West Asia News Agency) via REUTERS

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டு வான்வழி தாக்குதல்களைத் தொடர்ந்து இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி உயிரிழந்தார். இது, இரான் மற்றும் பரந்த பிராந்தியத்தில் நிச்சயமற்ற மற்றும் ஆபத்தான எதிர்காலத்தை முன்னறிவிக்கிறது.

நாட்டின் தலைவராகவும், இரானிய புரட்சிகர காவல் படை (IRGC) உட்பட ராணுவத்தின் தலைமை தளபதியாகவும் காமனெயி இருந்தார்.

கடந்த காலத்தில் தலைமை பொறுப்பு தொடர்வதை உறுதிசெய்யவும் அதிகார வெற்றிடம் ஏற்படாமல் தடுக்கவும் அடுத்த தலைமை விரைவாக முடிவு செய்யப்பட்டது.

ஆனால், இரான் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாலும் பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகள் மீது அந்நாடு ஏவுகணைகளை ஏவிவருவதாலும் தற்போது அடுத்த தலைமையை தேர்ந்தெடுப்பது சிக்கலானதாகவும் பிரச்னைகள் நிறைந்ததாகவும் இருக்கலாம்.

தெஹ்ரான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அதிகாரத்தில் வெற்றிடம் ஏற்படாமல் தடுக்க புதிய அதிஉயர் தலைவரை விரைந்து தேர்ந்தெடுக்க வேண்டும்

தலைமையை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறை

ஞாயிற்றுக்கிழமை இரானிய அரசு ஊடகத்தில் காமனெயியின் மரணம் அறிவிக்கப்பட்ட உடனேயே, அரசு 40 நாட்கள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்தது, மேலும் ஏழு நாட்கள் பொது விடுமுறையையும் அறிவித்தது.

By admin