• Sun. Mar 1st, 2026

24×7 Live News

Apdin News

காமனெயி கொலை – பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் மீது தாக்குதல்

Byadmin

Mar 1, 2026


இரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமனெயி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வன்முறை வெடித்துள்ளது. இந்தத் தூதரகம் துறைமுகத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
படக்குறிப்பு, கராச்சியில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை ஒரு கும்பல் சூறையாடியது.

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் கராச்சியில் போராட்டங்கள் நடந்தன.

பிபிசி உருதுவின்படி அங்குள்ள அமெரிக்க துணை தூதரகத்திற்கு வெளியே நடந்த வன்முறை ஆர்ப்பாட்டங்களில் 9 பேர் கொல்லப்பட்டனர்

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோக்களில், சிலர் துணை தூதரகத்தின் நுழைவாயிலை உடைத்து உள்ளே நுழைவதையும், வரவேற்பு மற்றும் பாதுகாப்பு அறையின் ஜன்னல்களை உடைப்பதையும் காண முடிகிறது.

இது ஆயத்துல்லா அலி காமனெயின் மரணத்தைத் தொடர்ந்து அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு வெளியே மக்கள் கூடிய ஒரு பொது ஆர்ப்பாட்டம் என்றும், தூதரகத்திற்குள் இருந்து தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் மஜ்லிஸ்-இ-வஹ்தத் முஸ்லிமீனின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

முன்னதாக, ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும், எட்டு பேர் காயமடைந்ததாகவும் காவல்துறை அதிகாரி சமி சையத் உறுதிப்படுத்தியுள்ளார்.

By admin