• Tue. Mar 11th, 2025

24×7 Live News

Apdin News

காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட மலம்புழா அணையிலிருந்து மதுபான ஆலைக்குத் தண்ணீர்: கேரளாவில் வலுக்கும் போராட்டம் – பிபிசி கள ஆய்வு

Byadmin

Mar 11, 2025


மலம்புழா அணை, கேரளா
படக்குறிப்பு, அரசியல் கட்சிகள், மதம் மற்றும் சமூக அமைப்புகளின் கொடிகள், பேனர்கள் மதுபான தொழிற்சாலை அமைய உள்ள நிலத்தில் நடப்பட்டுள்ளன

  • எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
  • பதவி, பிபிசி தமிழ்

கேரள மாநிலம் மலம்புழா அணையிலிருந்து தண்ணீர் எடுக்க மது ஆலைக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருப்பதற்கு அந்த மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் இத்திட்டத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றன.

ஆளும் இடது ஜனநாயக முன்னணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புரட்சிகர சோசலிசக்கட்சி (ஆர்எஸ்பி) ஆகியவையும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன

மது தொழிற்சாலையால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று கேரள அரசு கூறினாலும் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. அங்கு என்ன நடக்கிறது?

கேரளாவின் நெற்களஞ்சியம்

கேரள அரசின் நீர்ப்பாசனத் துறை இணையதள விவரங்களின்படி, இந்த அணை மூலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள 52,755 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன.

By admin