• Tue. Oct 21st, 2025

24×7 Live News

Apdin News

காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது – தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

Byadmin

Oct 21, 2025


காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தமிழ்நாடு, கனமழை வானிலை

பட மூலாதாரம், IMD website

தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்க கடலில் நேற்று நிலவிய வளிமண்டல சுழற்சியின் காரணமாக இன்று காலை 5.30 மணிக்கு தென்மேற்கு வங்க கடலில் ஒரு குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகியுள்ளது.

இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் மண்டலமாக தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் புதுவை காரைக்கால் பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனழை பெய்யக்கூடும்.



By admin