• Wed. Oct 22nd, 2025

24×7 Live News

Apdin News

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறாது – தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்?

Byadmin

Oct 22, 2025


தமிழ்நாடு, புயல், காற்றழுத்த தாழ்வுப் பகுதி, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

பட மூலாதாரம், IMD website

படக்குறிப்பு, வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதை காட்டும் வரைபடம் (இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் இருந்து)

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறாது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கரையை ஒட்டி தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து அதே பகுதியில் காலை 11.30 மணியளவில் நிலை கொண்டிருந்தது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா அருகே, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை எங்கு மழை பெய்யும்?

தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில் நாளை 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



By admin