0
காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்கிலாந்து இளவரசர் வில்லியம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலண்டன் காலநிலை நடவடிக்கை வாரத்தின் ஒரு பகுதியாக செயிண்ட் ஜேம்ஸ் அரண்மனையில் வட்டமேசை மாநாடு, எதிர்வரும் 29ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
இயற்கை பாதுகாப்புத் திட்டங்களுக்கான நிதியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘Nature’s Guardians: On the Road to COP30 & Beyond’ என்ற இந்த உயர்மட்ட வட்டமேசைக்கு இளவரசர் தலைமை தாங்கினார்.
இதில் இளவரசர் வில்லியம், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
“காலநிலை மற்றும் பல்லுயிர் இலக்குகளை அடைவதில் நாம் தீவிரமாக இருந்தால், பழங்குடி மக்களும் உள்ளூர் சமூகங்களும் இந்த முயற்சியில் கூட்டாளிகளாகவும், தலைவர்களாகவும் தீர்வுகளின் இணை உருவாக்குநர்களாகவும் மையமாக இருக்க வேண்டும்” என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.