• Tue. Nov 4th, 2025

24×7 Live News

Apdin News

கால் சென்டர் ஊழியர்களின் வேலையை ஏ.ஐ பறித்துவிடுமா?

Byadmin

Nov 3, 2025


2029க்குள் வாடிக்கையாளர் சேவையில் ஏற்படும் சாதாரண பிரச்னைகளில் 80%ஐ ஏஐ தானாகவே தீர்த்துவிடும் என்று வணிக மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமான கார்ட்னர் கணித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நம்மில் பலர் கால் சென்டர்களுக்கு அழைத்துப் பேசுவது குறித்துப் புலம்புகிறோம், ஆனால் ஏஐ -ஐ கையாள்வது அச்சூழலுக்கு உதவியாக இருக்குமா?

வாடிக்கையாளர் சேவைத் துறையில் ஏஐ மனிதர்களுக்கு மாற்றாக உருவாகுமா என்று சாட்ஜிபிடியிடம் கேட்டால், அது, ” ஏஐயும் மனிதர்களும் இணைந்து வேலை செய்வார்கள்” என்று ஒரு நுட்பமான பதிலை வழங்கும்.

ஆனால், மனிதர்களுக்கு அக்கருத்தில் பெரியளவு நம்பிக்கை இல்லை.

கடந்த ஆண்டு, இந்திய தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் (TCS) தலைமை நிர்வாகி கே. கிருத்திவாசன் இதுகுறித்து பேசுகையில், ஏஐ வளர்ச்சியின் காரணமாக ஆசியாவில் கால் சென்டர்களுக்கான தேவை “குறைந்து விடலாம்” என்று பைனான்சியல் டைம்ஸிடம் கூறியிருந்தார்.

இதே நேரத்தில், 2029க்குள் செயற்கை நுண்ணறிவு (AI) தானாகவே சுமார் 80% சாதாரண வாடிக்கையாளர் சேவை பிரச்னைகளை தீர்க்கும் என்று வணிக மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமான கார்ட்னர் கணிக்கிறது.

இப்போது “ஏஐ முகவர்கள்” (AI agents) என்ற சொல் குறித்து அதிகமாக பேசப்படுகிறது.



By admin