• Tue. Sep 23rd, 2025

24×7 Live News

Apdin News

காவல், தீயணைப்புத் துறைக்கு புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் | Chief Minister Stalin inaugurates new buildings for police and fire departments

Byadmin

Sep 23, 2025


சென்னை: தமிழகத்​தில் காவல் துறை, தீயணைப்பு மற்​றும் மீட்​புப் பணி​கள் துறை சார்​பில் ரூ.100.82 கோடியில் கட்​டப்​பட்​டுள்ள காவலர் குடி​யிருப்​புகள், காவல் நிலை​யங்​கள், தீயணைப்பு நிலைய புதிய கட்​டிடங்களை முதல்​வர் ஸ்டா​லின் திறந்து வைத்​தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: சென்னை தலை​மைச் செயல​கத்​தில் நேற்று நடை​பெற்ற நிகழ்​வில் முதல்வர் ஸ்டா​லின் கலந்​து​கொண்​டு தீயணைப்​பு, மீட்​புப் பணி​கள் துறை சார்​பில் செங்​கல்​பட்டு மாவட்​டம் கால​வாக்​கத்​தில் ரூ.21.85 கோடி​யில் கட்​டப்பட உள்ள மாநில பயிற்​சிக் கழகத்​துக்கு அடிக்​கல் நாட்​டி​னார்.

300 பயிற்​சி​யாளர்​கள் தங்​கும் வகையிலான தங்​கும் கூடங்​கள், பயிற்சி மைதானம், சமையல்​கூடம், மாதிரி தீயணைப்​பு, மீட்​புப் பணி நிலை​யம், மின்​சா​ரம், சாலை, கழி​வுநீர் வசதி உள்​ளிட்ட வசதி​களு​டன் இந்த வளாகம் கட்​டப்படவுள்​ளது.

ராம​நாத​புரம் மாவட்​டம் சக்​கரக்​ கோட்​டை​யில் குடி​யிருப்​பு, நிர்​வாக கட்​டிடம், ஆயுதக்​கிடங்​கு, பாசறை​கள், செங்​கல்​பட்டு மாவட்டம் ஓட்​டேரி, தஞ்​சாவூர் மாவட்​டம் நாச்​சி​யார்​கோ​விலில் காவல் நிலை​யங்​கள், சென்னை எழும்​பூரில் குதிரை லாயங்​கள் என ரூ.97.66 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள 342 காவலர் குடி​யிருப்​பு​கள், 2 காவல் நிலை​யங்​கள், 6 காவல் துறை கட்​டிடங்​களை முதல்வர் திறந்து வைத்​தார்.

திருச்​சியை தலை​மை​யிட​மாக கொண்ட தீயணைப்​புத் துறை மத்​திய மண்​டலத்தை 2 ஆக பிரித்து ரூ.1.04 கோடி​யில் விழுப்​புரத்தை தலை​மை​யிட​மாக கொண்டு உரு​வாக்​கப்​பட்​டுள்ள புதிய மண்டல அலு​வல​கம், சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் தீயணைப்பு நிலை​யத்​துக்கு ரூ.2.12 கோடி​யில் கட்​டப்​பட்ட புதிய கட்​டிடம் ஆகிய​வற்​றை​யும் முதல்​வர் திறந்து வைத்​தார்.

பள்​ளி, விடுதி கட்​டிடங்​கள்: பிற்​படுத்​தப்​பட்​டோர், மிக​வும் பிற்​படுத்​தப்​பட்​டோர், சிறு​பான்​மை​யினர் நலத் துறை சார்​பில் ரூ.3.94 கோடி​யில் கூடு​தல் வகுப்​பறை கட்​டிடங்​கள், விடுதி கட்​டிடங்​களை முதல்​வர் ஸ்டா​லின் திறந்து வைத்​தார்.

இதுத​விர, சென்னை ராணிமேரி கல்​லூரி, செங்​கல்​பட்டு மாவட்​டம் நெம்​மேலி, தஞ்​சாவூர் மாவட்​டம் திரு​வை​யாறு, ஒரத்​த​நாடு, தஞ்​சாவூர், மதுரை மாவட்​டம் சாத்​தமங்​கலம், நீல​கிரி மாவட்​டம் உதகமண்​டலத்​தில் ரூ.61.44 கோடி​யில் அனைத்து உள்கட்டமைப்பு வசதி​களு​டன் 1,050 மாணவ, மாணவி​கள் பயன்​பெறும் வகை​யில் 8 சமூகநீதி விடுதி கட்​டிட கட்​டு​மானப் பணிகளுக்கு அடிக்​கல் நாட்​டி​னார்.

மேலும் 23 பட்​ட​தாரி ஆசிரியர்​கள், 18 இடைநிலை ஆசிரியர்​களுக்கு பணி நியமன ஆணை​களை​யும் அவர் வழங்​கி​னார். இந்த நிகழ்ச்​சி​யில், அமைச்​சர் மெய்​ய​நாதன், தலை​மைச் செயலர் முரு​கானந்​தம், உள்​துறை செயலர் தீரஜ்கு​மார், டிஜிபி வெங்கடராமன், தீயணைப்​புத் துறை இயக்​குநர் சீமா அகர்​வால் உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.



By admin