• Thu. Jun 19th, 2025

24×7 Live News

Apdin News

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை இந்தியா ஏற்காது என்று டிரம்பிடம் கூறிய மோதி

Byadmin

Jun 18, 2025


இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் பேசினர்.

காஷ்மீர் பிரச்னை குறித்து, பாகிஸ்தானுடன் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் செய்வதை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் கூறியதாக இந்தியாவின் மூத்த தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

செவ்வாயன்று இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலில், இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை, பிரதமர் மோதி மிக “வலுவாக” டிரம்பிடம் தெரிவித்ததாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.

கடந்த மே மாதம் அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளான இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நான்கு நாள் மோதல் ஏற்பட்டதிலிருந்து, “காஷ்மீர் பிரச்னையை” தீர்க்க இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய டிரம்ப் பலமுறை முன்வந்துள்ளார்.

இந்தியாவின் அறிக்கை குறித்து வெள்ளை மாளிகை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

By admin