• Mon. Jun 2nd, 2025

24×7 Live News

Apdin News

கிரிக்கெட் சூதாட்டமா, திறமைக்கான விளையாட்டா? – தமிழ்நாடு அரசால் கட்டுப்படுத்த முடியாதது ஏன்?

Byadmin

May 27, 2025


ஐபிஎல், கிரிக்கெட் டிரீம் லெவன், பேண்டசி கிரிக்கெட், டிரீம் 11

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

  • எழுதியவர், சுமேதா பால்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

டெல்லியில் வாகன நிறுத்துமிடத்தை நிர்வகிக்கும் தர்மேந்திர கௌதம், மே 17ஆம் நாளன்று ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கப்பட்டதால் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஏனென்றால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்ததால் ஐபிஎல் சிறிது காலம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

உலகின் மிகவும் பிரபலமான மற்றும் அதிக பணம் புரளும் பிரான்சைஸ் (தனி நபர்கள் அணியின் உரிமையாளர்களாக இருப்பார்கள்) கிரிக்கெட் தொடராக ஐபிஎல் கருதப்படுகிறது

கிரிக்கெட் மீதான ஆர்வம் மட்டுமே கௌதம் ஐபிஎல்லை விரும்புவதற்கான காரணம் அல்ல, கற்பனை செயலி என்ற பொருள்தரும் ‘ஃபேண்டசி சூதாட்ட செயலிகள்’ மூலம் கணிசமாக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை அவருக்கு இந்த ஐபிஎல் போட்டி வழங்கும் என்பதும் அவருடைய மகிழ்ச்சிக்குக் காரணம்.

“விளையாட்டின் மீதான உற்சாகமும், வெற்றி பெறும் நம்பிக்கையும்தான் இந்த விளையாட்டை நோக்கி ஈர்த்துள்ளது” என்கிறார் கௌதம்.

By admin