• Fri. Oct 25th, 2024

24×7 Live News

Apdin News

கிரைம் திரில்லராக உருவாகும் ‘இரவினில் ஆட்டம் பார்’

Byadmin

Oct 25, 2024


நடிகர் உதயா என்கிற உதயகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘இரவினில் ஆட்டம் பார்’ எனும் திரைப்படம் முழு நீள கிரைம் திரில்லர் ஜேனரில் உருவாகி இருக்கிறது என்றும், இந்தப் படம் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் ஏ. தமிழ்செல்வன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘இரவினில் ஆட்டம் பார்’ எனும் திரைப்படத்தில் உதயா என்கிற உதயகுமார், மாரா. ராஜேந்திரன், கிரேசி, சரவணன், அஸ்மிதா, ஈஸ்வரன், சி எம் துரை ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜினோ பாபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நல்ல தம்பி இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை ஆர் எஸ் வி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சேலம் ஆர். சேகர் தயாரித்துள்ளார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” பாடசாலையில் பயிலும் மாணவ மாணவிகளை போதை மருந்துக்கு அடிமையாக்கும் நாசக்கார கும்பலை எதிர்த்து நிழலான நாயகன் ஒருவன் போராடுகிறான். அவன் தன்னுடைய போராட்டத்தை இரவில் மட்டுமே நிகழ்த்துகிறார்.

மேலும் பாடசாலையில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தரும் நபர்களையும் அந்த நிழல் நாயகன் அழிக்கிறான். இந்த திரைப்படத்தின் திரைக்கதை முழுவதும் இரவில் நடைபெறுவது போல் உருவாக்கப்பட்டிருக்கிறது. அனைத்து பணிகளும் நிறைவடைந்ததால்  இந்த திரைப்படத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் எட்டாம் திகதியன்று பட மாளிகையில் வெளியிட திட்டமிட்டு வருகிறோம்” என்றார்.

The post கிரைம் திரில்லராக உருவாகும் ‘இரவினில் ஆட்டம் பார்’ appeared first on Vanakkam London.

By admin