• Sat. Dec 27th, 2025

24×7 Live News

Apdin News

கிறிஸ்துமஸ்: இந்தியாவில் நடந்த தாக்குதல்கள் பற்றி சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?

Byadmin

Dec 27, 2025


கிறிஸ்துமஸ்: இந்தியாவில் நடந்த தாக்குதல்கள் பற்றி சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Devendra Shukla

படக்குறிப்பு, இந்தியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது, ​​பல இடங்களில் கொண்டாடிய நபர்கள் மீது தாக்குதல்கள் நடந்ததாக செய்திகள் வெளியாயின.

இந்தியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது, ​​பல இடங்களில் கொண்டாடிய நபர்கள் மீது தாக்குதல்கள் நடந்ததாக செய்திகள் வெளியாயின.

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் கேரளா உட்பட பல இடங்களில் இருந்து இத்தகைய செய்திகள் வந்தன. இது இந்திய ஊடகங்களில் மட்டுமல்லாமல், சர்வதேச ஊடகங்களிலும் விவாதப்பொருளானது.

பல வல்லுநர்களும் மனித உரிமை அமைப்புகளும் இத்தகைய சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்தனர்.

இந்தியாவில் ‘கிறிஸ்தவ சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைக்’ கருத்தில் கொண்டு, கிறிஸ்தவ சமூகத்திற்கு இந்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பிரதமர் மோதி டிசம்பர் 25ஆம் தேதி காலை கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அன்றைய தினம் காலையில் அவர் டெல்லியில் உள்ள ஒரு தேவாலயத்திற்குச் சென்றிருந்தார்.

By admin