டெவோன் கடற்கரையில் இரண்டு ஆண்கள் காணாமல் போயுள்ளதாக நம்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மக்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்ட பின்னர், டெவோன் மற்றும் கார்ன்வால் பொலிஸார் 10:25 GMT மணிக்கு பட்லீ சால்டர்டன் கடற்கரைக்கு அழைக்கப்பட்டனர்.
இதன்போது, பலர் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டனர், மேலும் சம்பவ இடத்தில் துணை மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டதுடன், முன்னெச்சரிக்கையாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும், 40 வயதுடைய ஒருவர் மற்றும் 60 வயதுடைய மற்றொருவர் தேடுதலின் போது கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கிறிஸ்துமஸ் நீச்சலுக்குப் பிறகு காணாமல் போன இரண்டு ஆண்கள் appeared first on Vanakkam London.