• Wed. Oct 2nd, 2024

24×7 Live News

Apdin News

குஜராத் சோம்நாத் கோவில் அருகில் ‘புல்டோசர் நடவடிக்கை’ – இஸ்லாமிய தலங்கள் குறிவைக்கப் பட்டனவா?

Byadmin

Oct 2, 2024


குஜராத், சோமநாதர் கோவில், புல்டோசர்

பட மூலாதாரம், PawanJaiswal

“அந்த தர்கா மற்ற மதத் தலங்களைப் போலவே புனிதமானது. குறைந்தது ஆறு தர்காக்களும், எனது முன்னோர்களது கல்லறைகள் சிலவும் அழிக்கப்பட்டுள்ளன.”

இவை 40 வயதான இஸ்மாயில் மன்சூரியின் வார்த்தைகள்.

சனிக்கிழமை (செப்டம்பர் 28) அதிகாலை நடந்த ‘மெகா இடிப்பு இயக்கத்தின்’ ஒரு பகுதியாக, குஜராத்தின் சோம்நாத் கோவில் அருகே சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டபோது அவர் ‘எல்லாவற்றையும்’ இழந்ததாகத் தெரிகிறது.

இடிப்பு நடவடிக்கை தொடங்கியபோது அவரது குடும்பத்தினர் அவசரமாக வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக மன்சூரி கூறுகிறார். அவர்களால் தங்கள் சாமான்களைக் கூட எடுத்துச் செல்ல முடியவில்லை.

By admin