• Sun. Nov 9th, 2025

24×7 Live News

Apdin News

குஜராத்: ‘வாடகை’ வங்கி கணக்குகள் மூலம் புதிய வழியில் மோசடிப் பணம் கைமாறியது எப்படி?

Byadmin

Nov 9, 2025


குஜராத், சைபர் மோசடி, வாடகை வங்கிக் கணக்குகள், ரூ.200 கோடி மோசடி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

    • எழுதியவர், ராக்ஸி ககடேகர் சாரா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

வீடு, கடை, கார், பங்களா போன்றவற்றை வாடகைக்கு விடுவது சாதாரண விஷயம் தான். ஆனால் இப்போது, குஜராத்தில் வங்கிக் கணக்குகளை வாடகைக்கு விடும் புதிய மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 100-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை குஜராத் காவல்துறை கண்டுபிடித்துள்ளது.

இந்தக் கணக்குகள் குஜராத்தின் பல பகுதிகளைச் சேர்ந்தவை. பெரும்பாலான கணக்குகள் குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குச் சொந்தமானவை.

தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுபோன்ற இன்னும் பல வங்கிக் கணக்குகள் வெளிச்சத்திற்கு வர வாய்ப்பு உள்ளது.

குஜராத், சைபர் மோசடி, வாடகை வங்கிக் கணக்குகள், ரூ.200 கோடி மோசடி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குஜராத் காவல்துறை, சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 100-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை கண்டுபிடித்துள்ளது.

என்ன நடந்தது?

குஜராத் சைபர் கிரைம் பிரிவு நடத்திய விசாரணையில், சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான பெரிய மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

By admin