• Wed. Sep 10th, 2025

24×7 Live News

Apdin News

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி

Byadmin

Sep 9, 2025


சிபி ராதாகிருஷ்ணன், பாஜக, ஆர்.எஸ்.எஸ், குடியரசு துணைத் தலைவர் தேர்தல்

பட மூலாதாரம், X@CPRGuv

படக்குறிப்பு, சிபி ராதாகிருஷ்ணன்

இந்தியாவின் புதிய குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 452 வாக்குகள் கிடைத்துள்ளன என ராஜ்ய சபா செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான பிசி மோதி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டியும் போட்டியிட்டனர்.

தோல்வியை தழுவிய சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளை பெற்றார்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மொத்தம் 767 எம்.பி.க்கள் வாக்களித்ததாகவும், இதில் 752 வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், 15 வாக்குகள் செல்லாத வாக்குகள் எனவும் பிசி மோதி கூறினார்.

By admin