• Mon. Sep 8th, 2025

24×7 Live News

Apdin News

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் எப்போதும் இல்லாத வகையில் கவனம் பெறுவது ஏன்?

Byadmin

Sep 8, 2025


 முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி - சி.பி. ராதாகிருஷ்ணன்
படக்குறிப்பு,

அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறாத குடியரசு துணைத் தலைவர் தேர்தல் இம்முறை இவ்வளவு எதிர்பார்ப்புகளுடன் நடத்தப்படுவது ஏன் என்ற கேள்வி எழாமல் இல்லை.

இந்தியாவின் 15வது குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நிறைவடைந்து விட்டன. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன், போட்டியிடுகிறார், மறுபுறம், இந்தியா கூட்டணி முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சுதர்சன் ரெட்டியை குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வேட்பாளராக நியமித்துள்ளது.

வாக்குப்பதிவு செப்டம்பர் 9ஆம் தேதி நடத்தப்பட்டு, அதே நாளில் முடிவும் அறிவிக்கப்படும்.

முன்னாள் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர், உடல்நலக் காரணங்களால் ஜூலை 21ஆம் தேதி இரவு திடீரென ராஜினாமா செய்தார். இதனால் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

By admin