இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ்க்கு குடியேற்றவாசிகளை நாடு கடத்தும் முதல் விமானங்கள் அடுத்த வாரம் தொடங்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இது இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் இடையே ஒரு புதிய ஒப்பந்தத்தின் கீழ், அதாவது ‘ஒன்றுக்கு ஒன்று’ (one in, one out) என்ற பரிமாற்றுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
கடந்த ஜூலை மாதம் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இங்கிலாந்திற்கு மேற்கொண்ட அரசமுறைப் பயணத்தின் போது, இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
கடந்த மாதம், டோவரில் டஜன் கணக்கான குடியேற்றவாசிகள் இந்த ஒப்பந்தத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர். “அவர்கள் விரைவில் பிரான்ஸ்க்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்” என்று உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் தெரிவித்திருந்தார்.
நாட்டை விட்டு வெளியேற ஐந்து நாட்களுக்குள் பிரான்சுக்கு நாடு கடத்தப்படுவார்கள் என்று புகலிடம் கோருபவர்களுக்கு அதிகாரப்பூர்வ நீக்கும் உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கு ஈடாக, கடல் வழியாக வர முயற்சிக்காத மற்றும் பாதுகாப்பு மற்றும் தகுதிச் சோதனைகளில் தேர்ச்சி பெறும் அதே எண்ணிக்கையிலான புகலிடம் கோருபவர்களை இங்கிலாந்து ஏற்றுக்கொள்ளும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது.
இதேவேளை, கன்சர்வேடிவ்கள் உட்பட விமர்சகர்கள், “இந்த கொள்கை செயல்பட முடியாதது மற்றும் துஷ்பிரயோகத்திற்கு எளிதில் உட்பட்டது” என்று வாதிடுகின்றனர்.
புதிய உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத், இந்த ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் நாளை திங்கட்கிழமை (15) கேள்வி கேட்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
The post குடியேற்றவாசிகளை திரும்பப் பெறும் one in, one out ஒப்பந்தம் தொடங்குகிறது! appeared first on Vanakkam London.