• Mon. Oct 7th, 2024

24×7 Live News

Apdin News

குடும்ப உறுப்பினர்கள் 13 பேரை விஷம் வைத்து கொன்ற இளம்பெண்

Byadmin

Oct 7, 2024


பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசித்து வந்த இளம்பெண் தனது குடும்ப உறுப்பினர்கள் 13 பேரை விஷம் வைத்து கொலை செய்துள்ளார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கடந்த ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி ஒரே நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 13 பேரும் உயிரிழந்தனர்.

பிரேத பரிசோதனையில் அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இது தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதன்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண், அங்குள்ள இளைஞன் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இது அவரது பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த இளைஞனை திருமணம் செய்து வைக்கவும் மறுத்தனர்.

இதனால் கடும் ஆத்திரமடைந்த இளம்பெண், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தனது குடும்பத்தையே தீர்த்துக்கட்டும் சதிகாரியாக மாறியுள்ளார். இதற்கான திட்டத்தை தனது காதலன் யோசனைபடி அவர் அரங்கேற்றியுள்ளார்.

அதாவது வீட்டில் ரொட்டி சமைக்க பயன்படுத்தும் கோதுமை மாவில் விஷத்தை கலந்துள்ளார். சம்பவத்தன்று அந்த கோதுமை மாவில் இளம்பெண்ணின் குடும்பத்தினர் ரொட்டி சமைத்து சாப்பிட்டு அனைவரும் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, அந்த இளம்பெண்ணை பொலிஸார் கைது செய்தனர்.

By admin