“குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொண்டாள்” ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த மைதிலியின் தந்தை கூறியது என்ன?
எங்கள் இதயத்தின் ஒரு பகுதியை இழந்துவிட்டோம். அவள் தன்னுடைய கனவை நிறைவேற்றினாள். ஆனால் அது முழுமையடையவில்லை. சிறுவயதிலிருந்தே விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்று கனவு கண்டாள்.
மைதிலி பாட்டீலின் பெற்றோரின் துயரக் குரல் இது. ஆமதாபாத் விமான விபத்தில் மைதிலி உயிரிழந்தார்.
இவர் தந்தை உடல்நிலை காரணமாக வேலையை விட வேண்டியிருந்தது. இருப்பினும், உறுதியுடன் தனது கல்வியை முடித்து, தனது லட்சியத்தை அடைந்தார் மைதிலி. வேலை கிடைத்ததும் தனது குடும்பத்திற்கான முழு நிதிப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.
“மைதிலியின் தோழி என் மனைவிக்கு போன் செய்து எங்கள் மகள் துரதிர்ஷ்டவசமான விமானத்தில் இருப்பதாக கூறினார். என் மகள் கிருஷ்ணரின் தீவிர பக்தர். எப்போதும் தன்னுடன் பகவத் கீதை வைத்திருப்பாள். அவளுக்கு நிறைய கனவுகள் இருந்தன. அப்பா, நீங்கள் தனியாக எல்லாவற்றையும் நிர்வகிக்க முடியாது என்று கூறினாள். அவள் முழு குடும்பத்தையும் பார்த்துக் கொண்டாள்.” எனத் தெரிவித்தார் மைதிலியின் தந்தை மோரேஷ்வர் பாட்டீல்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு