• Wed. Feb 12th, 2025

24×7 Live News

Apdin News

குனா சமூகம்: பனாமாவில் உள்ள இந்த தீவிலிருந்து மக்கள் வெளியேறியது ஏன்?

Byadmin

Feb 12, 2025


பனாமா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடல்மட்ட உயர்வால் இத்தீவில் உள்ள மக்கள் 2050ம் ஆண்டுக்குள் வாழத் தகுதியற்றதாகிவிடும் என்கின்றனர் விஞ்ஞானிகள்

“இந்த தீவு மூழ்கினால், நானும் அதனுடன் மூழ்கி விடுவேன்,” என்று புன்னகைத்துக்கொண்டே கூறுகிறார் டெல்ஃபினோ டேவிஸ்.

பனாமாவில் உள்ள தனது குனா சமூகத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் சிறிய அருங்காட்சியகத்தை டேவிஸ் நிர்வகிக்கிறார்.

அருங்காட்சியகத்தின் தரையை சுத்தப்படுத்தப் பயன்படுத்தப்படும் துடைப்பத்தின் ஓசை கேட்கும் அளவுக்கு அங்கு அமைதி நிலவுகிறது.

“முன்பு, குழந்தைகள் கூச்சலிடுவதையும், எங்கும் இசை ஒலிப்பதையும், பக்கத்து வீட்டுக்காரர்கள் வாக்குவாதம் செய்வதையும் நீங்கள் கேட்கலாம். ஆனால் இப்போது அந்த சத்தங்கள் எல்லாம் மறைந்துவிட்டன ” என்கிறார் டேவிஸ்.

By admin