• Sat. Feb 22nd, 2025

24×7 Live News

Apdin News

கும்பமேளா: கங்கை நீரின் தரம் குறித்து மத்திய மற்றும் உத்தரபிரதேச அரசுகளின் இருவேறு ஆய்வறிக்கைகள் கூறுவது என்ன-

Byadmin

Feb 22, 2025


மகா கும்பமேளா, பிரயாக்ராஜ், கங்கை, புனித நீராடல், மத்திய அரசு - உத்தரபிரதேசம்

பட மூலாதாரம், Getty Images

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி முதல் மகா கும்ப மேளா நடைபெற்று வருகிறது. வருகின்ற பிப்ரவரி 26-ஆம் தேதி இந்த நிகழ்வு நிறைவடைகிறது. கும்பமேளா முடிவதற்கு வெகு சில நாட்களே இருக்கின்ற சூழலில் கங்கையும், யமுனா நதியும் சந்திக்கும் இடத்தில் உள்ள நீரின் தூய்மை குறித்து இரண்டுவிதமான அறிக்கைகள் வெளியாகியுள்ளன. அது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்(சி.பி.சி.பி), தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் மகா கும்பமேளாவில் மக்கள் புனித நீராடும் நீரின் தூய்மை குறித்து அறிக்கை ஒன்றை சமர்பித்தது.

கங்கை-யமுனை நதியின் நீரில் நிர்ணயிக்கப்பட்ட தரத்தை விட பல மடங்கு அதிகமான கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி அன்று உத்தரபிரதேச மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் (UPPCB) தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதன் முடிவுகள் சி.பி.சி.பி.யின் நீர் தரம் தொடர்பான அறிக்கை முடிவுகளை நிராகரித்தது.

By admin