• Tue. Feb 11th, 2025

24×7 Live News

Apdin News

கும்பமேளா: பக்தர்கள் புனித நீராடுவது தவிர வேறு என்னவெல்லாம் செய்கிறார்கள்? பிபிசி கள ஆய்வு

Byadmin

Feb 11, 2025


கும்பமேளா, பிரயாக்ராஜ்

பட மூலாதாரம், Getty Images

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகின் மாபெரும் மதம் சார்ந்த ஒன்றுகூடலான கும்பமேளா தற்போது நிறைவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் பக்தர்கள் தொடர்ந்து குவிந்து கொண்டிருப்பதால் பிரயாக்ராஜ் நகரம் திணறிக் கொண்டிருக்கிறது.

கும்பமேளா என்றதும் அனைவரது நினைவுக்கும் வருவது உடல் முழுவதும் விபூதியைப் பூசிய நாகா சாதுக்கள்தான். ஆனால், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தக் கும்பமேளா, வெறும் நாகா சாதுக்களைப் பற்றியது அல்ல, இது பல கோடி மக்களின் மாபெரும் நம்பிக்கை.

புனித நதிகளில் நீராடுவதன் மூலம் மோட்சம் பெறலாம் என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட கும்பமேளா, பிரயாக்ராஜ், ஹரித்வார், நாசிக், உஜ்ஜயினி என இந்தியாவின் நான்கு நகரங்களில் நடைபெறுகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிரயாக்ராஜில் கும்பமேளாவுக்காக ஒரு தற்காலிக நகரமே உருவாக்கப்பட்டிருக்கிறது.

By admin