• Sat. Mar 15th, 2025

24×7 Live News

Apdin News

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கரடிபுத்தூர் கிராம மக்கள் போராடுவது ஏன்?

Byadmin

Mar 15, 2025


திருவள்ளூர், கரடிபுத்தூர், தமிழ்நாடு செய்திகள்,  மண் குவாரி, கிராவல் மண், மேய்க்கால் புறம் போக்கு, பட்டா கேட்டு போராட்டம், பொதுமக்கள் போராட்டம்
படக்குறிப்பு, ரேசன் அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தும் பொதுமக்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் மண் குவாரிக்கு வழங்கப்பட்ட அரசு அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்திப் போராடிய தங்களை காவல்துறை அடித்துத் துன்புறுத்தியதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை மாவட்ட நிர்வாகம் மறுக்கிறது.

மண் குவாரிக்கு எதிராக திருவள்ளூர் மாவட்டம் கரடிபுத்தூர் மக்கள் போராடுவது ஏன்? அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிய களத்துக்குச் சென்றது பிபிசி தமிழ்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ளது கரடிபுத்தூர் கிராமம். ஒருபுறம் விவசாய நிலங்கள், மறுபுறம் தொழிற்சாலைகள் என ஆந்திர மாநில எல்லையோரத்தில் இக்கிராமம் உள்ளது.

By admin