• Sun. Jun 8th, 2025

24×7 Live News

Apdin News

குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்ற முனையாதீர்கள்! – தமிழ்க் கட்சிகளிடம் அநுர அரசு வேண்டுகோள்

Byadmin

Jun 7, 2025


“வடக்கு, கிழக்கில் மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து உள்ளூராட்சி சபைகளை நிறுவத் தமிழ்க் கட்சிகள் முன்வர வேண்டும். எந்தக் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதோ அந்தக் கட்சி ஆட்சியமைக்க ஏனைய கட்சிகள் இடமளிக்க வேண்டும்.”

– இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“மக்கள் ஆணையை மீறி எவரும் செயற்பட முடியாது. எனவே, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து தமிழ்க் கட்சிகள் செயற்பட வேண்டும்.

எந்தச் சபையில் எந்தக் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதோ அந்தக் கட்சி ஆட்சியமைக்க ஏனைய கட்சிகள் இடமளிக்க வேண்டும்.

அதைவிடுத்து குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்றத் தமிழ்க் கட்சிகள் முயற்சிக்கக்கூடாது. அது மக்கள் ஆணைக்குச் செய்யும் துரோகம் ஆகும்.” – என்றார்.

 

By admin