229 பேரில் 73 பேர் (32 சதவீதம்) தங்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக அறிவித்துள்ளனர். அவர்களில் 36 பேர் (16 சதவீதம்) கடுமையான குற்ற வழக்குகளை சந்தித்து வருகின்றனர். ஒரு எம்.பி., கொலை வழக்கை சந்தித்து வருகிறார். 4 எம்.பி.க்கள் கொலை முயற்சி வழக்கையும், 3 பேர் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளையும் எதிர்நோக்கி உள்ளனர். கட்சிவாரியாக பார்த்தால், பா.ஜ.க.-27 எம்.பி.க்கள், காங்கிரஸ்-12, திரிணாமுல் காங்கிரஸ்-13, ஆம் ஆத்மி-4, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, பாரத் ராஷ்டிர சமிதி-தலா 3 என குற்ற வழக்குகளை சந்தித்து வருகிறார்கள்.
மேலும், 31 மாநிலங்களவை எம்.பி.க்கள் (14 சதவீதம்) தங்களுக்கு தலா ரூ.100 கோடிக்கு மேல் சொத்துகள் இருப்பதாக அறிவித்துள்ளனர்.