• Fri. Nov 7th, 2025

24×7 Live News

Apdin News

குழந்தைகளுக்கு ஏற்றப்பட்ட எச்ஐவி ரத்தம்; தலசீமியா சிகிச்சைக்காக சென்ற இடத்தில் நேர்ந்த துயரம்

Byadmin

Nov 7, 2025


தலசீமியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எச்.ஐ.வி பாதித்த ரத்தம் ஏற்றிய மருத்துவமனை ஊழியர்கள்

பட மூலாதாரம், Yousuf Sarfaraz

படக்குறிப்பு, மருத்துவமனையின் அலட்சியத்தால், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று உள்ள ரத்தம் செலுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள அரசு சதார் மருத்துவமனையில், தலசீமியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பிபிசியிடம் பேசிய மேற்கு சிங்பூம் மாவட்ட மாஜிஸ்திரேட் சந்தன் குமார், எட்டு வயதுக்குட்பட்ட தலசீமியாவால் பாதிக்கப்பட்ட ஐந்து குழந்தைகள் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார்.

இந்த வழக்கில், சாய்பாசா சிவில் சர்ஜன், எச்.ஐ.வி பிரிவுக்குப் பொறுப்பான மருத்துவர் மற்றும் சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப நிபுணர் ஆகியோர் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் உதவித் தொகையை முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ரத்த மாற்றத்தின் மூலம் எச்.ஐ.வி தொற்று ஏற்பட்ட மூன்று தலசீமியா பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலையை அறிய பிபிசி முயன்றது.

By admin