• Wed. Nov 26th, 2025

24×7 Live News

Apdin News

‘குழந்தைகளுடன் வாழ முடியவில்லை; குமட்டிக் கொண்டு வருகிறது’ – குப்பை எரி உலை திட்டத்தால் கொந்தளிக்கும் கொடுங்கையூர் மக்கள்

Byadmin

Nov 26, 2025


கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு, வடசென்னை, குப்பை ஏரிஉலை திட்டம், குப்பையிலிருந்து மின்சாரம் திட்டம்

மத்திய சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் சமீபத்தில் குப்பைகளை மேலாண்மை செய்வதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது, பொது உள்ளாட்சி திடக்கழிவு மேலாண்மை வசதி (Common Municipal Solid Waste Management Facility, CMSWMF) எனப்படும் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பான வரைவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக, சென்னை கொடுங்கையூரில் திட்டமிடப்பட்டுள்ள எரிஉலை தங்கள் விருப்பத்தை மீறி வந்துவிடுமோ என அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர். அவர்கள் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கையே அப்பகுதியில் இருந்து அகற்ற வேண்டுமெனக் கோருகின்றனர்.

வடசென்னை பகுதியில் ஒருவர் பயணித்துக் கொண்டிருக்கும்போது, திடீரென கடுமையான துர்நாற்றம் உங்கள் நாசியைத் தாக்கினால், நீங்கள் கொடுங்கையூரை நெருங்கிவிட்டீர்கள் என்று அர்த்தம். இந்த துர்நாற்றம் உங்களைத் தாக்க, நீங்கள் அங்கிருக்கும் குப்பைக் கிடங்கிற்கு அருகில்கூட செல்ல வேண்டியதில்லை. சுமார் ஒரு கி.மீ. தூரத்திற்கு முன்பே அந்தத் துர்நாற்றம் உங்களைத் தாக்கும்.

சுமார் கால் நூற்றாண்டிற்கும் மேலாக இந்தக் குப்பைக் கிடங்கை தங்கள் பகுதியில் இருந்து அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரி வரும் நிலையில், இந்தக் குப்பைகளை எரித்து மின்சாரமாக்க சென்னை மாநகராட்சி வகுத்துள்ள திட்டத்திற்கு இந்தப் பகுதி மக்களிடம் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில்தான், இதுபோன்ற திட்டங்களுக்கு முன்கூட்டியே சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற வேண்டியதில்லை என்ற மத்திய அரசின் வரைவு அறிவிப்பு கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

By admin