• Wed. Dec 3rd, 2025

24×7 Live News

Apdin News

கூடலூரில் ஆட்டம் காட்டிய புலியை கூண்டில் சிக்க வைக்க உதவிய வனத்துறையின் உத்தி

Byadmin

Dec 3, 2025


புலியை கூண்டு வைத்து பிடித்தது எப்படி?, ஆட்கொல்லி புலி சிக்குமா?

பட மூலாதாரம், TNFD

படக்குறிப்பு, தற்போது கூடலுார் பகுதியில் கால்நடைகளை அதிகமாகக் கொன்று வந்த புலி ஒன்று, வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியுள்ளது.

    • எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
    • பதவி, பிபிசி தமிழ்

நீலகிரி மாவட்டம் கூடலுார் பகுதியில் கால்நடைகளை அதிகமாகக் கொன்று வந்த புலி ஒன்று, வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியுள்ளது.

இந்தப் புலியை பிடித்தது முதல் அடர்ந்த காட்டுக்குள் கொண்டு விடுவித்தது வரை ஒருமுறை கூட மயக்க ஊசி செலுத்தப்படாதது அதிக கவனம் பெற்றுள்ளது.

இந்தப் புலியை பிடிப்பதற்காக பிரத்யேக கூண்டு தயாரித்து புதிய உத்தியை பயன்படுத்தியதாக வனத்துறையினர் கூறியுள்ளனர்.

அதே கூண்டு, தற்போது முதுமலையில் பெண்ணை அடித்துக் கொன்றதாக கருதப்படும் புலியைப் பிடிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது. அந்த புலி சிக்குமா என்று வனத்துறையினர் கேமராக்களை வைத்துக் கண்காணித்து வருகின்றனர்.

மயக்க ஊசி செலுத்தாமலே பிடிபட்டு விடுவிக்கப்பட்ட புலி

புலியை கூண்டு வைத்து பிடித்தது எப்படி?, ஆட்கொல்லி புலி சிக்குமா?

பட மூலாதாரம், TNFD

படக்குறிப்பு, நீலகிரியில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாகவுள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்புகளில் தெரியவந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம் முழுக்க முழுக்க மலைப்பகுதிகளை உள்ளடக்கிய பகுதியாகும். அங்குதான் முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. முதுமலையை ஒட்டியுள்ள கூடலுார் மற்றும் நீலகிரி வனக்கோட்டப் பகுதிகளிலும் புலிகள் பரவி வாழ்கின்றன.

By admin