• Tue. Nov 25th, 2025

24×7 Live News

Apdin News

‘கூடுதல் நேரம் – கூடுதல் ஊதியம்’ – என்ன சொல்கிறது புதிய தொழிலாளர் சட்ட விதிகள்?

Byadmin

Nov 25, 2025


மாத சம்பளம் பெறுபவர்களுக்கு புதிய தொழிலாளர் சட்ட விதிகள் கூறும் மாற்றங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில், பழைய தொழிலாளர் சட்டங்களுக்கு பதிலாக மத்திய அரசு நான்கு புதிய தொழிலாளர் சட்ட விதிகளை கொண்டு வந்துள்ளது.

ஓராண்டு பணி செய்தாலே கிராஜுவிட்டி பெற தகுதி, மிகுதி நேர வேலைக்கு இரட்டிப்பு ஊதியம், பெண்கள் இரவு நேரத்தில் பணியாற்ற அனுமதி போன்றவை இந்த சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் நலனுக்காக இந்த சட்ட விதிகள் கொண்டுவரப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது. மறுபுறம் இது தொழிலாளர்களுக்கு எதிரானது என தொழிற்சங்கங்கள் விமர்சிக்கின்றன.

ஏற்கனவே நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து நான்கு சட்ட விதிகள் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, தொழிலாளர் ஊதியச் சட்ட விதி 2019, தொழில்துறை தொடர்புகள் சட்ட விதி 2020, சமூகப் பாதுகாப்புச் சட்ட விதி 2020 மற்றும் தொழில்முறைப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிடச் சூழல் சட்ட விதி 2020 ஆகியவை நவம்பர் 21ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

By admin