• Tue. Mar 24th, 2026

24×7 Live News

Apdin News

கேரளத்தில் உள்ள ஒரே ஒரு தமிழ் எம்.எல்.ஏ.வின் தொகுதியில் என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு

Byadmin

Mar 24, 2026


கேரளம், சட்டமன்ற தேர்தல், தேவிகுளம், தமிழ் எம்.எல்.ஏ.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

கேரளத்தில் உள்ள 140 தொகுதிகளில் தமிழர் ஒருவர் சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பது தேவிகுளம் (மூணாறு) தொகுதியில் மட்டுமே. அங்கு வாழும் லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களுக்கு, வாக்காளர் பட்டியலில் கேரளாவாசி என்றும், ரேஷன் கார்டுகளில் ‘கேரளாவில் வசிக்காதவர்’ (Non-Resident Kerala) என்றும் குறியிடப்படுவதால் நிலம் உள்ளிட்ட பல உரிமைகள் மறுக்கப்படுவதாகக் கூறுகின்றனர் அங்குள்ள தமிழர்கள்.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலம் மற்றும் வீடு வழங்கக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் தொடர்ச்சியாக இந்தத் தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக இருந்தும் இந்த பிரச்னைகளைத் தீர்க்கவில்லை என்பது இவர்களின் புகாராக உள்ளது.

கேரளத்தை 10 ஆண்டுகளாக ஆளும் இடது ஐக்கிய முன்னணி அரசின் மீது, காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் குற்றம் சாட்டும் நிலையில், இதுதொடர்பான கேள்விகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தற்போது தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினராகவும், இந்தத் தேர்தலின் வேட்பாளராகவும் உள்ள ஏ.ராஜா பதிலளிக்க மறுத்துவிட்டார்.

கேரள சட்டசபையில் ஒரேயொரு தமிழர் பிரதிநிதி

தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளத்தில் உள்ள எல்லையோரப் பகுதிகளில் தமிழர்கள் பரவலாக வசித்து வருகின்றனர். கேரள தமிழ் பாதுகாப்பு இயக்கம் பகிர்ந்த தகவலின்படி, இடுக்கி மற்றும் பாலக்காடு மாவட்டத்துக்கு உட்பட்ட தேவிகுளம் (மூணாறு), பீர்மேடு, நெம்மாரா, மன்னார்காடு, மலம்புழா ஆகிய 5 தொகுதிகளில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கின்ற அளவுக்கு கணிசமாக தமிழர்கள் வசிக்கின்றனர்.

மாநிலத்திலுள்ள 140 சட்டப்பேரவை தொகுதிகளில், இடுக்கி மாவட்டத்திலுள்ள தேவிகுளம் (தனி) தொகுதியில் தமிழர்கள் பலமுறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது இந்தத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஏ.ராஜா இருக்கிறார். கடந்த 20 ஆண்டுகளாக இத்தொகுதியை இந்த கட்சிதான் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

By admin