• Fri. Jun 20th, 2025

24×7 Live News

Apdin News

கேரளாவில் தமிழில் பயின்ற மாணவர்களுக்கு ஆங்கிலம் மலையாளத்தில் தேர்வு

Byadmin

Jun 20, 2025


கேரள மொழி, தமிழ் மொழி, கேரள மாணவர்கள், தமிழ்நாட்டு மாணவர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

    • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
    • பதவி, பிபிசி தமிழ்

கேரளாவில் தமிழ் வழிக்கல்வியில் பயின்ற பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் தமிழில் வினாத்தாள் வழங்கப்படாமல் ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் வழங்கப்பட்டதால், தமிழ் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பெருமளவில் சரிந்துள்ளது.

இது தமிழ் வழிக்கல்வியை முடக்குவதற்கான முயற்சி என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்று கேரள ஆளுங்கட்சி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மொழி சிறுபான்மையினரின் நலனுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு விஷயங்களையும் அரசு பரிசீலித்து வருவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை ஒட்டி கேரளாவில் அமைந்துள்ள பாலக்காடு, இடுக்கி, திருவனந்தபுரம் போன்ற சில மாவட்டங்களில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகளுக்காக அந்த மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.

அதேபோல கேரளாவை ஒட்டி தமிழகப் பகுதிகளில் அமைந்துள்ள கோவை, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி போன்ற சில மாவட்டங்களில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்களின் குழந்தைகளுக்காக மலையாள வழிக் கல்வி முறையும் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

By admin