• Tue. Apr 8th, 2025

24×7 Live News

Apdin News

கேரளா: ஊழியர்கள் நாய் போல நடத்தப்பட்ட விவகாரம் – வீடியோ வெளியிட்டவர் மீது வழக்கு ஏன்? நடந்தது என்ன?

Byadmin

Apr 8, 2025


கேரளா

பட மூலாதாரம், Handout

கொச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியர்களை நாயைப் போல கழுத்தில் கயிறு கட்டி, தரையில் மண்டியிட்டு வரச் செய்ததாக வைரலாகப் பரவிய காணொளி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவை பரப்பிய நபர் மீது அதே நிறுவனத்தில் பணியாற்றிய ஒரு பெண்ணின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக பிபிசி தமிழிடம் பெரும்பாவூர் காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மார்க்கெட்டிங் நிறுவனம், அங்கு பணியாற்றும் ஊழியர்களில் தினசரி விற்பனை இலக்கை எட்டாத ஊழியர்களை நாயைப் போல கயிறு கட்டி தண்டனை தருவதாக அங்குள்ள உள்ளூர் காட்சி ஊடகங்களில் ஒரு காணொளி வெளியானது.

அதில் இளைஞர் ஒருவரை நாய்க்கு கழுத்தில் கயிறு கட்டுவது போல கயிறு கட்டி தவழ வைத்து இழுத்துச் செல்வதுடன், நாயைப் போல குரைக்க வைத்ததுடன், ஒரு தட்டில் நாணயங்களைப் போட்டு அதை நக்க வைப்பது போன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் வேறு சில ஊழியர்களும் உடனிருக்கின்றனர்.

By admin