• Tue. Feb 11th, 2025

24×7 Live News

Apdin News

கைட் ரன்னர்கள்: பார்வை மாற்றுத் திறனாளிகள் தடகளப் போட்டிகளில் பங்கெடுக்க உதவும் இவர்கள் யார்?

Byadmin

Feb 11, 2025


கைட் ரன்னர்கள்: பார்வை மாற்றுத் திறனாளிகள் தடகளப் போட்டிகளில் பங்கெடுக்க உதவும் இவர்கள் யார்?
படக்குறிப்பு, பாராலிம்பிக்கில் 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற முதல் பார்வை மாற்றுத் திறனாளி இந்திய பெண் ரக்‌ஷிதா

“என் இளம் வயதில் என் கிராமத்தில் உள்ள அனைவரும் ‘இவளுக்கு கண் பார்வை இல்லை, இவள் வீண்’ என்று கூறுவார்கள்,” என்கிறார் ரக்‌ஷிதா ராஜு.

இப்போது 24 வயதான அவர் இந்தியாவின் சிறந்த இடைநிலை (middle distance) பாரா தடகள வீரர்களில் ஒருவர் ஆவார். “இது என்னைப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது,” என்று அவர் கூறுகிறார்.

ரக்‌ஷிதா தென்னிந்தியாவில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் பார்வை மாற்றுத் திறனாளியாகப் பிறந்தார். 10 வயதுக்குள் தனது பெற்றோர் இருவரையும் அவர் இழந்துவிட்டார். கேட்கும் குறைபாடு மற்றும் பேச்சுக் குறைபாடுள்ள தனது பாட்டியால் அவர் வளர்க்கப்பட்டார்.

“நாங்கள் இருவருமே மாற்றுத் திறனாளிகள். எனவே என் பாட்டி என்னைப் புரிந்துகொண்டார். அதிகம் கவலைப்பட வேண்டாம் என்று அவர் கூறுவார்,” என்று ரக்‌ஷிதா குறிப்பிட்டார்.

By admin