• Fri. Oct 25th, 2024

24×7 Live News

Apdin News

கைதான இரு வேட்பாளர்களும் பொலிஸ் பிணையில்!

Byadmin

Oct 24, 2024


யாழ். வடமராட்சியில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அக்கட்சியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ். மாவட்ட வேட்பாளர் வரதராஜன் பார்த்தீபன் ஆகியோர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

நெல்லியடியில் இன்று பிற்பகல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதேவேளை, பருத்தித்துறையில் இன்று பிற்பகல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வேளை, தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ். மாவட்ட வேட்பாளர் வரதராஜன் பார்த்தீபன், தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் பருத்தித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட இருவரையும் அந்தந்தப் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர் பொலிஸ் பிணையில் இன்று மாலை விடுவித்தனர்.

By admin