• Sun. Oct 5th, 2025

24×7 Live News

Apdin News

கொத்து கொத்தாக மடிந்த குழந்தைகளை காத்த மருத்துவம்; மருத்துவத்துக்கான முதல் நோபல் பரிசின் பின்னணி

Byadmin

Oct 5, 2025


தனது உதவியாளருடன் டாக்டர் வான் பெர்க்மேன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தனது உதவியாளருடன் டாக்டர் வான் பெர்க்மேன்

நடுஇரவில் தடதடவென்று கதவைத் தட்டும் ஓசை. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த டாக்டர் ஹென்ரிச் கீஸ்லர் பதறி விழித்தார். பெர்லின் பல்கலைக்கழக அறுவைசிகிச்சை கிளினிக்கின் குழந்தைகள் பிரிவின் மருத்துவரான அவர், டாக்டர் வான் பெர்க்மேனின் மேற்பார்வையின் கீழ் பணிபுரிந்தார்.

தேதி டிசம்பர் 20, 1891. கடும் குளிர் காற்று வீசிய அந்த இரவில், எப்போதையும் மீறிய பனிப்பொழிவு நகரை மூடிக் கொண்டிருந்தது. நாள் முழுவதும் குழந்தைகள் வார்டில் சேவையாற்றிய அவர், சில மணிநேரங்களுக்கு முன்புதான் வீடு திரும்பி, சோர்வாகத் தூங்கியிருந்தார்.

கதவைத் தட்டும் ஓசை தொடர்ந்தது. ‘இந்த நள்ளிரவில் யாராக இருக்கும்?’ என எண்ணி, எழுவதற்கு மனமில்லாமல், படுக்கையிலிருந்து எழுந்தார். கதவைத் திறந்து பார்த்த அவரது கண்கள், அதிர்ச்சியில் விரிந்தன.

கண்ணீரும் கம்பலையுமாக, முகம் வெளிறி நின்ற ஒரு இளம் தாய். அவரைத் தொடர்ந்து வந்த மருத்துவமனை செவிலியர், அவளுக்கு ஆதரவாக நின்றார்.

By admin