• Mon. Mar 16th, 2026

24×7 Live News

Apdin News

கொன்சால்வ்ஸ் கார்சியா: இந்த இந்திய மதபோதகர் ஜப்பானில் சிலுவையில் அறைப்பட்டது ஏன்?

Byadmin

Mar 16, 2026


கொன்சால்வ்ஸ் கார்சியா: ஜப்பானில் சிலுவையில் அறையப்பட்ட இந்திய மதபோதகர்

பட மூலாதாரம், SHARAD BADHE/BBC

படக்குறிப்பு, கொன்சால்வ்ஸ் கார்சியா

இந்தச் சம்பவம் நடந்து 400 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. போர்த்துகீசியர்கள் இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் கால் பதித்துப் பல ஆண்டுகள் கடந்திருந்தன.

கடந்த 1498இல் வாஸ்கோடகாமா கோழிக்கோடு வந்த பிறகு, போர்த்துகீசியர்கள் வர்த்தகம் மற்றும் மத பிரசாரத்திற்கான முக்கியமான இடங்களை இந்திய நிலப்பரப்பில் தேடத் தொடங்கினர்.

கடந்த 1510இல் அல்போன்சோ டி அல்புகெர்க் கோவாவுக்கு வந்து வடக்குப் பகுதிகளின் மீது தனது கவனத்தைத் திருப்பினார்.

விரைவில் போர்த்துகீசியர்களின் விருப்பம் நிறைவேறியது. 1513ஆம் ஆண்டில், போர்த்துகீசியர்கள் ரெவ்தண்டாவில் ஒரு சிறிய கோட்டையைக் கட்ட அனுமதிக்கப்பட்டனர். பிறகு அவர்கள் தானே, கல்யாண், தாராபூர் போன்ற கிராமங்களின் மீது தங்கள் பார்வையைப் பதித்தனர். அவர்களின் பார்வை அடுத்தபடியாக வசாய் நகரில் ஏற்கெனவே இருந்த சிறிய கோட்டை தளத்தில் பதிந்தது.

குறுகிய காலகட்டத்தில், 1533-இல் போர்த்துகீசியர்கள் வசாய் கோட்டைப் பகுதியைக் கைப்பற்றி, அடுத்த 200 ஆண்டுகளுக்குத் தங்கள் காலடியை அங்கு உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டனர்.

By admin