• Tue. Apr 22nd, 2025

24×7 Live News

Apdin News

கோல்வால்கர்: ஆர்எஸ்எஸ்சை நீண்ட காலம் வழிநடத்திய இவர், காந்தியுடன் எந்த விதத்தில் முரண்பட்டார்? ஒரு வரலாற்றுப் பார்வை

Byadmin

Apr 22, 2025


கோல்வால்கர், முக்கிய செய்திகள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆர்.எஸ்.எஸ் இன் இரண்டாவது தலைவர் மாதவ் சதாசிவ்ராவ் கோல்வால்கர்

சர்தார் படேல் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு ஷ்யாமா பிரசாத் முகர்ஜி நாக்பூரை அடைந்தார். சற்று முன்பாக அவர் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்திருந்தார். நாக்பூரில் சிமெண்ட் பூசப்படாத ஒரு வீட்டிற்கு அவர் சென்றார். அங்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் எம்.எஸ். கோல்வால்கர் அவருக்காகக் காத்திருந்தார்.

இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருந்தது. புதிய கட்சியைத் தொடங்க உதவுமாறு கோல்வால்கரிடம் முகர்ஜி கேட்டார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எந்த அரசியல் கட்சியின் பின்னாலும் செல்ல முடியாது என்று கூறி கோல்வால்கர் அவரது கோரிக்கையை நிராகரித்தார்.

சில மாதங்களுக்குப் பிறகு தனது முடிவை மறுபரிசீலனை செய்த கோல்வால்கர் இந்தப் பணிக்காக தனது நம்பகமான ஐந்து தொண்டர்களை வழங்குவதாக முகர்ஜிக்கு உறுதியளித்தார்.

தீன் தயாள் உபாத்யாய், சுந்தர் சிங் பண்டாரி, நானாஜி தேஷ்முக், பாபுசாகேப் சோஹ்னி மற்றும் பல்ராஜ் மதோக் ஆகியோர் இந்த ஐவர்.

By admin