• Tue. Nov 25th, 2025

24×7 Live News

Apdin News

கோவைக்கு நவ.19-ல் பிரதமர் மோடி வருகை: 3,000 போலீஸார் பாதுகாப்பு; போக்குவரத்து மாற்றம்

Byadmin

Nov 25, 2025


கோவை: தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பின் சார்பில் நாளை மறுநாள் (19-ம் தேதி) கோவையில் நடக்கும் இயற்கை விவசாயிகள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். பிரதமர் வருகையையொட்டி, 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மாநகரில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், இயற்கை விவசாயிகள் மாநாடு கோவை கொடிசியா அரங்கில் வரும் 19-ம் (நாளை மறுநாள்) தேதி முதல் 21-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயற்றை விவசாயிகள் கலந்து கொள்கின்றனர். பிரதமர் மோடி பங்கேற்று இம்மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

By admin