• Sun. Mar 23rd, 2025

24×7 Live News

Apdin News

கோவையில் அடுத்தடுத்து 2 சட்டவிரோத குழந்தை தத்து சம்பவங்கள் – 15 பேர் கைது; என்ன நடந்தது?

Byadmin

Mar 22, 2025


குழந்தை தத்து சம்பவங்கள்

பட மூலாதாரம், Getty Images

கோவையில் சமீபத்தில் நடந்த 2 சட்டவிரோத குழந்தை தத்து சம்பவத்தில் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் ஒரு குழந்தை இறந்தநிலையில், குழந்தையின் சடலம் தேண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. என்ன நடந்தது?

“நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்த திருமணமாகாத 26 வயது பெண் ஒருவர் கர்ப்பமாகியுள்ளார். அவருக்கு கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதியன்று, ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.” என வடவள்ளி காவல் நிலைய போலீசார் தெரிவித்தனர்

திருமணமாகாத பெண்ணுக்கு பிறந்த குழந்தை

“அப்போது அந்த மருத்துவமனையில் காவலாளியாகப் பணியாற்றுபவரிடம் அக்குழந்தையை இளம்பெண் கொடுத்துவிட்டு கோத்தகிரிக்குச் சென்று விட்டார். அந்த பெண், பிரசவத்துக்கு வருவதற்கு முன்பு, அவருடைய பெயரைப் பதிவு செய்து, மருத்துவ உதவிகளைச் செய்து வந்த கிராம சுகாதார செவிலியர், குழந்தை பற்றி அவரிடம் விசாரித்துள்ளார். அப்போதுதான் அந்தக் குழந்தை காவலாளியிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

By admin