• Wed. Mar 26th, 2025 10:06:37 AM

24×7 Live News

Apdin News

கோவையில் இயங்காத என்டிசி மில்கள் – வேலை, ஊதியமின்றி பல ஆயிரம் தொழிலாளர்கள் தவிப்பு

Byadmin

Mar 23, 2025


என்டிசி மில்கள்

‘கொரோனா காலத்தில் 2020 மார்ச் 23 அன்று வேலையிலிருந்து நிறுத்தப்பட்டோம். அதன்பின், இன்று வரையிலும் திரும்பவும் வேலை கிடைக்கவில்லை. நான் வைண்டிங் பிரிவில் மேஸ்திரியாக இருந்தேன். இப்போது தினமும் கூலி வேலைக்கு சென்றுதான் குடும்பத்தைக் காப்பாற்றுகிறேன். தினமும் உரிய வேலை, ஊதியம் கிடைக்காததால் வட்டிக்குப் பணம் வாங்கிக் குழந்தைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன்.”

தேசிய பஞ்சாலைக்கழகத்துக்குச் சொந்தமான கோவை ரங்கவிலாஸ் மில்லில் பணியாற்றி, வேலையையும் ஊதியத்தையும் இழந்து நிற்கும் செந்தில் கூறிய வார்த்தைகள் இவை.

”எங்களுக்கு வேலை இருக்கிறது. ஆனால் 5 மாதங்களாக சம்பளம் தரவில்லை, வேறு வேலைக்கும் போக முடியவில்லை. எப்படித்தான் குடும்பத்தை நடத்துவது என்றே தெரியவில்லை. கடன் சுமை ஏறிக்கொண்டே செல்கிறது. சம்பளம் கொடுத்தாலும் இப்போது வாங்கும் கடனுக்கு வட்டியை எப்படிக்கட்டுவது?”

மூடப்பட்டுள்ள தேசிய பஞ்சாலைக்கழக ஆலை ஒன்றில் பணியாற்றும் பெயர் கூற விரும்பாத துாய்மைப் பணியாளர் ஒருவரின் வார்த்தைகள் இவை.

By admin