• Fri. Mar 14th, 2025

24×7 Live News

Apdin News

கோவையில் மத்திய அரசு பணிக்கான தேர்வில் ஆள் மாறாட்டம் – வட மாநிலத்தவர்கள் சிக்கியது எப்படி?

Byadmin

Mar 13, 2025


கோவை வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம், தேர்வு மோசடி, இன்றைய செய்திகள், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

மத்திய அரசுக்குச் சொந்தமான கோவை வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில், புதிய பணியாளர்களுக்கான தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த வட மாநிலங்களைச் சேர்ந்த 8 பேர் சிக்கி கைதாகியுள்ளனர்.

இதே நிறுவனத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டிலும் இதே போன்ற ஆள் மாறாட்ட மோசடி நடந்தது. அப்போதும் இப்போதும் வீடியோவும், கைரேகையும் ஆள் மாறாட்டத்தைக் காட்டிக் கொடுத்துள்ளன.

கோவை ஆர்எஸ் புரத்தில் உள்ள வனக்கல்லுாரி வளாகத்தில், மத்திய அரசுக்குச் சொந்தமான வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் அமைந்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலின் (ICFRE) கீழ் இயங்கி வரும் இந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், காடுகள் சார்ந்த தேசிய அளவிலான ஆராய்ச்சியை மேற்கொள்வதுடன், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அந்தமான், நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகளின் பிராந்திய வனவியல் ஆராய்ச்சிகளையும் கையாண்டு வருகிறது.

By admin